on April 30th, 2010 by sakthi
என் தந்தையின் 94வது பிறந்தநாள் 04.05.2010 அன்று. அந்த உண்மைத் தெய்வத்தின் நினைவுகளாய் வழிந்தோடும் எண்ணங்களைச் செதுக்கி ஓர் கவிதாய் தந்தையின் மலர்ப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். அன்புடன் சக்தி சக்திதாசன் அன்புள்ள அப்பா, ஆசையில் ஓர் கடிதம் அன்று நான் உன்னிடம் அன்பாகக் கூறியிருக்க வேண்டியவைகளை அடக்க முடியாமல் அன்னைத் தமிழில் கவிதாய் …… ஒன்றல்ல , இரண்டல்ல அப்பா ஆண்டுகள் பன்னிரண்டு அவசரமாய்ப் பறந்து விட்டன அந்தகன் அவன் உன்னை என்னிடமிருந்து பறித்தெடுத்து …. […]
Continue reading about அன்புள்ள அப்பா »
Category:
உறவுகளே உமக்காக, கவிதை |
2 Comments, Join in »
on April 30th, 2010 by sakthi
விடிவு வரும் ! விடிவு வரும் என்றே நதிக்கரையோரம் நடந்து கொண்டே நான் …. எத்தனை இரவுகள் வந்தன ? அத்தனையும் விடிந்தன …. தோழா …. நம் வாழ்க்கையில் வந்ததா விடிவு ? கேள்விகள் மட்டும் தான் எம் நெஞ்சில் எழலாம் விடைகள் மட்டும் யார் யாரோ கைகளில் … ஒவ்வொரு வருடமும் ஒவ்வோர் மே மாதம் தவறாமல் உலகெங்கும் ஊர்வலங்கள் …. அது மட்டுமா ? உழைப்போர் அனைவருக்குமாய் விழாக்களும் கேளிக்கைகளும்….. தோழா ! […]
Continue reading about கனவுதானா தோழா ! »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on April 29th, 2010 by sakthi
வாதிடுவது என்பது சிலருக்கு ஒரு போதை வஸ்து போன்றது. உள்ளத்தின் கருத்தை தெளிவாக மற்றையோருக்கு புரியவைக்கும் போது, அதனோடு ஒத்துப் போகமுடியாதவர்களோடு ஆக்கபூர்வமாகப் புரியும் தர்க்கம் ஆரோக்கியமானதுவே. ஆனால் ஆரோக்கியமான தர்க்கம் என்னும் எல்லைக்கோட்டைக் கடந்து நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடும் நிலைக்குப் போய்விட்டால் அங்கேதான் தர்க்கம் ஒரு போதைமருந்தாகி விடுகிறது. எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என்றோ அன்றி எல்லோராலும் எல்லாவற்றையும் செய்துமுடித்துவிட முடியும் என்றோ நம்பும் ஒருவரும் இருக்க முடியாது. அப்படியானின் […]
Continue reading about தவறான பதிலைக் காட்டிலும் மெளனம் சிறந்தது »
Category:
உன்னை ஒன்று கேட்பேன் .... |
No comments yet, be the first »
on April 29th, 2010 by sakthi
பார்த்தான் , பார்த்தாள் பார்வைகள் பேசிக்கொண்டன. ஆமை தன்னுடலைத் தனக்குள்ளே சுருக்கிக் கொள்வதைப் போல பெண்களும் தம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டு விடுவதில் வல்லவர்கள் இல்லையா ? தூக்கம் வராமல் புரண்டவன் தானும் கவிஞனாகி விடுகிறான். அவளுடன் பேசுவதைப் போல காகிதத்துடன் பேசுகிறான். (யாவும் கற்பனையே) இன்னும் என்ன மெளனம் ? ==================== ஒரே ஒருதரம் என்னை நீ பார்த்துவிட்டால் ஓராயிரம் நட்சத்திரங்கள் எண்ணத்தில் கண்சிமிட்டி புன்னகைக்கின்றன. உன் இதழோரம் சிந்துகின்ற புன்னகையை ஏந்துவதற்காய் […]
Continue reading about இன்னும் என்ன மெளனம் ? »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on April 29th, 2010 by sakthi
அன்பு நண்பா, உள்ளத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைப் பேசிட உள்ளம் துடிக்கிறது ஆனாலும் ஏதோ அச்சம் உள்ளத்து உணர்வுகளுக்கு பூட்டுப் போட்டுள்ளது ஏன் நண்பா ? உண்மைகள் இந்த உலகத்துக்கு ஒவ்வாததால் உரைப்பவரைச் சாடுவார்களே எனும் உள்ளுறுத்தும் எண்ணம் தானா உண்மைக்குப் பூட்டிடுகிறது ? விதம் விதமான மேடைகளில் வித்தியாசமான தோற்றங்களில் ஒரே மனிதன் நடித்திடும் போது திரைவிழுந்து காட்சிகள் மாறும்போது தனை மறந்து ரசித்திடும் கூட்டத்தைப் போல பார்த்துக் கொண்டே நாம் மெளனமாய் நடக்கிறோம் ….. […]
Continue reading about நண்பனுக்கு ஒரு மடல் »
Category:
நண்பனுக்கு ஒரு மடல் |
No comments yet, be the first »
on April 24th, 2010 by sakthi
கண்களை மூடி விட்டேன் காட்சியை இழந்து விட்டேன் கருமைக்குள் புகுந்து விட்டேன் இதுதான் மரணமென்றால் ? நேற்றையின் வேதனை இன்றைய சோதனை நாளைய சாதனை அனைத்துக்கும் அர்த்தமில்லை இதுதான் மரணமென்றால் ? விந்தாகி விழுந்ததும் கருவாகி முகிழ்த்ததும் உருவாகி விழுந்ததும் – பின் எதுவாகி மறைவதும் இதுதான் மரணமென்றால் ? காற்றில்லா வெற்றிடம் பொழுதில்லா வேளைகள் வலியில்லா உணர்வுகள் இல்லாதவை இல்லாமை இதுதான் மரணமென்றால் ? மரணமென்னும் பயணத்தில் எவையெல்லாம் […]
Continue reading about இதுதான் மரணமென்றால் ! »
Category:
கவிதை |
No comments yet, be the first »
on April 24th, 2010 by sakthi
ஆற்றுடன் கலந்திடும் நீர்வீழ்ச்சி ஆழியுடன் கலந்திடும் ஆறு இன்ப உணர்வுகளுடன் கலந்திடும் சொர்க்கத்தின் பூங்காற்று இவையனைத்தும் தனியாக இல்லை இதுதான் இயற்கை விதியென்றால் பெண்ணே ! உன்னோடு நான் ஏன் கலந்திடக்கூடாது ? பார் பெண்ணே ! மலையுச்சிகள் வானைத்தொட்டு சொர்க்கத்தை முத்தமிடுவதும் கடலலைகள் ஒன்றஒயொன்று கட்டிப்ப்புரள்வதும் ஆதவனின் ஒளிக்கதிர்கள் பூமியை அணைத்து முத்தமிடுவதும் வெண்ணிலவின் ஒளி சமுத்திரத்தை ஆரத்தழுவிக் கொள்வதும் என்ன பயனை விளைத்திடும் உன் முத்தம் என் மீது பதியாவிட்டால் […]
Continue reading about காதலென்னும் தத்துவம் »
Category:
பிறமொழித் தழுவல்கள் |
No comments yet, be the first »
on April 21st, 2010 by sakthi
2010ம் ஆண்டின் முற்பகுதியில், விஞ்ஞான யுகத்தின் உச்சியில் மரணத்தை மரணிக்க முயலும் விஞ்ஞானிகளின் மத்தியில் இயற்கையின் சிற்றம் மேற்குலகை ஒரு ஆட்டு ஆட்டுவித்திருக்கிறது. உலகத்தின் பரப்பளவை குறுக்கி, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பயணிப்பதை மிகவும் இலகுவாக்கியிருக்கிறது விஞ்ஞானம் ஆகாய மார்க்கமாக. ஆனால் அந்தப் பயணத்தின் நீளத்தை அதிகரித்து தனது ஆற்றலை இன்று உலகுக்கு நிரூபித்திருக்கிறது இயற்கை. இயற்கைவளத்தை உபயோகித்து மனிதவளத்தை மேம்படுத்த விஞ்ஞானம் ஆரம்பத்தில் துணை போனது . ஆனால் […]
Continue reading about இயற்கையின் சீற்றமும் விஞ்ஞான வேட்கையும் »
Category:
சொல்லத்தான் நினைக்கிறேன் |
No comments yet, be the first »
on April 21st, 2010 by sakthi
பாடிப் பாடி நீ எமக்கு தேடித் தேடிக் கூறிய உண்மைகள் பாட்டுடைத் தலைவன் உன் பாரிய பெருமைகளை உரைக்கின்றனவே ! பாரினில் நிறைந்திட்ட பாதகப் பிரிவினைகள் தன்னை பசுந்தமிழ் துணையுடன் நீ பறைசாற்றிய வகைதனை இன்று வியந்திட்ட மாந்தர் கூட்டம் விளக்க வார்த்தைகள் இல்லையே ! பாரதில் முழக்கம் செய்த பாரதி என்னும் தமிழ்ப்புலவன் தன்னை போற்றிய நிந்தன் நெஞ்சம் கண்டு பாரதனில் நீயும் எமக்காய் பாரதிதாசானாய் ஒளிர்ந்தாய் சமத்துவம் அற்ற உலகில் தவித்திடும் உழைத்திடும் வர்க்கம் […]
Continue reading about உனக்காக …… இது உனக்காக ….. »
Category:
கவிதை |
No comments yet, be the first »